ஆபத்தான கிணறு

Update: 2022-07-29 12:45 GMT

கரூர் மாவட்டம், கட்டிப்பாளையம் பகுதியில் இருந்து திருக்காடுதுறை பகுதிக்கு செல்லும் வாய்க்கால் கரை ஓரம் போடப்பட்ட தார் சாலையின் அருகே விவசாய கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணறு நாளடைவில் சரிவு ஏற்பட்டு தார் சாலை பாதி கிணற்றுக்குள் விழுந்துவிட்டது. இதனால் கிணறு உள்ள சாலை மிகவும் சிறியதாக ஆகிவிட்டது. இந்த வழியாக நான்கு சக்கரம் மற்றும் இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. விபத்து அபாயம் உள்ளதால் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்