திருவாரூர் மாவட்டம், வலங்கைமானில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியை சுற்றி கருவேல மரங்கள் வளர்ந்து காடுபோல் காட்சி அளிக்கிறது. இதன்காரணமாக விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிது. இதனால் பள்ளிக்கு வரும் மாணவிகள் அச்சத்துடன் வந்து செல்கின்றனா். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பள்ளியை சுற்றியுள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாகும்.