தெருநாய்களால் அச்சம்

Update: 2022-07-28 15:46 GMT

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றுத்திரிகின்றன. இவை இந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை கடிக்க துரத்துகிறது. இதனால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து வருகின்றனர். மேலும் சிறுவர், சிறுமிகளை கடிக்க வருகிறது. இதனால் பெற்றோர்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்