ராமநாதபுரம் நகரில் இளங்கோ அடிகள் தெருவில் மழைநீர் குளம் போல தேங்கியுள்ளது. தேங்கிய மழைநீரில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாவதால் இப்பகுதியில் தொற்றுநோய் பரவும் வாய்ப்பு நிலவுகிறது. மேலும் சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் மின்மோட்டார் உதவியுடன் மழைநீரை உறிஞ்சி அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.