ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி அருகே சேரங்கை கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளியில் மாணவர்கள் விளையாட மைதானம் இல்லாததால் சாலையில் வந்து விளையாடுகின்றனர். இதனால் தினமும் சிறு, சிறு விபத்துகளில் மாணவர்கள் சிக்குகிறார்கள். எனவே அதிகாரிகள் இந்தப்பள்ளியில் மைதானம் அமைத்து மாணவர்கள் பள்ளியிலேயே விளையாட அனுமதிக்க வேண்டும்.