கிளை தபால் நிலையம் வேண்டும்

Update: 2022-07-28 11:44 GMT

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதி அகணி ஊராட்சி நந்தியநல்லூர் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பெரியவர்கள் சிறுசேமிப்பு, அஞ்சல் காப்பீடு, சிறுசேமிப்பு போன்ற சேவைகளுக்காக நீண்ட தூரத்தில் உள் தபால் நிலையத்துக்கு சென்று வருகின்றனர்.இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் நலன் கருதி நந்தியநல்லூர் கிராமத்தில் கிளை தபால் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்