திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலை சுற்றி உள்ள சாலைகளில் நேற்று முன்தினம் பெய்த மழையால் மழைநீர் தேங்கி குளம்போல் தேங்கி நிற்கிறது. மேலும் மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து வந்ததால் துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.