திருச்சி-தஞ்சை ரோட்டில் உள்ள இரட்டைவாய்காலில் உள்ள நடைபாதை இருபுறமும் உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் பாலத்தின் வழியாக வரகனேரி உள்பட பல்ேவறு பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாய்க்கால் பாலத்தை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.