கரூர் மாவட்டம், தரகம்பட்டியில் உள்ள தாலுகா அலுவலகத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் தாலுகா அலுவலகத்தை சுற்றி சுற்றுச்சுவர் கட்டப்படவில்லை. மேலும் பொதுமக்களுக்கு குடிநீர், இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம், கழிப்பறை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் உள்ளது. எனவே தாலுகா அலுவலகத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.