தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2022-07-26 14:56 GMT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள தங்கநகரம் கிராமத்தின் அரியலூர்-பெரம்பலூர் ரோட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு லாரியும், காரும் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலிருந்து போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த கார் அகற்றப்படாமல் இருந்தது. இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியாகி இருந்தது. இதை அறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்திலிருந்து விபத்தில் சிக்கிய காரை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த குன்னம் போலீசாருக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்