உடைந்து கிடக்கும் எல்லைமுடிவு அறிவிப்பு பலகை

Update: 2022-07-26 14:26 GMT
நாகை மாவட்டம் திருக்குவளை தாலுகாவில் வாகன ஓட்டிகளின் நலன் கருதி ஆங்காங்கே ஊர்பெயர்பலகை, வேககட்டுபாட்டு அறிவிப்பு பலகை, எல்லை முடிவு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் திருக்குவளை பகுதியில் வைக்கப்பட்டிருந்த நத்தம்பள்ளம் சாலை எல்லை முடிவு அறிவிப்பு பலகை உடைந்து சாலையோரத்தில் கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எல்லை முடிவை அறியமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகளின் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் புதிதாக எல்லை முடிவு அறிவிப்பு பலகை வைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்