பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வருகிறார்கள். இந்நிலையில் மாணவ- மாணவிகள் இயற்கை உபாதைகள் கழிப்பதற்காக கழிவறை வசதி போதுமானதாக இல்லை. இதனால் மாணவ- மாணவிகள் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நேரில் ஆய்வு செய்து மாணவ- மாணவிகள் பயன்பெறும் வகையில் கழிவறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.