துணை சுகாதார நிலையம் மேம்படுத்தப்படுமா?

Update: 2023-09-17 17:03 GMT

தென்காசி அருகே மத்தளம்பாறையில் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் உள்ளது. இங்கு சுற்று வட்டார பகுதி மக்கள் வந்து சிகிச்சை பெற்று சென்றனர். தற்போது போதிய டாக்டர்கள், செவிலியர்கள் இல்லாததால் பெரும்பாலான நாட்களில் துணை சுகாதார நிலையம் மூடியே கிடக்கிறது. இதனால் பொதுமக்கள், கர்ப்பிணி பெண்கள் வெளியூர்களுக்கு சிகிச்சைக்கு செல்வதால் அவதிப்படுகின்றனர். எனவே துணை சுகாதார நிலையத்துக்கு போதிய மருத்துவ பணியாளர்களை நியமித்து, தரம் உயர்த்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்