பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான மருத்துவ கல்லூரி எதிரில் அடிக்கடி மின்மோட்டார் திருடு போகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட போலீசார் நடவடிக்கை எடுத்து மர்மநபர்களை பிடிப்பதோடு, இப்பகுதியில் அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.