கிளை நூலகம் செயல்பட நடவடிக்கை

Update: 2023-09-17 14:58 GMT

கிளை நூலகம் செயல்பட நடவடிக்கை

பல்லடம் வட்டாரம் சுக்கம்பாளையம் கிராம ஊராட்சியில் பகுதி நேர கிளை நூலகம் இயங்கி வந்தது. அந்த நூலகத்தில் மாணவர்கள், இளைஞர்கள் சென்று பல்வேறு நூல்களைப் படித்து அறிவுத்திறனை வளர்த்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக கிளை நூலகம் திறக்கப்படுவதில்லை. தற்போது கிராம நிர்வாக அலுவலர் அலுவலமாக செயல்பட்டு வருகிறது. கிளை நூலகம் இல்லாமல் மாணவர்கள், இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, செயல்படாமல் உள்ள கிளை நூலகத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கந்தவேல்,பல்லடம்.

98683 463763

மேலும் செய்திகள்