அரியலூர் உழவர் சந்தை முழுமையான பயன்பாடு இன்றி உள்ளது. தற்போது வியாபாரிகள் பெரும்பாலும் சாலையோரத்தில் தரைக்கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, அரியலூர் உழவர் சந்தையை முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.