கடலூர் மாவட்டம் அண்ணாகிராமம் ஒன்றியம் சாத்திப்பட்டு காலனியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பழுதான கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது. இருப்பினும் தற்போது வரை புதிய கட்டிடம் கட்டித்தர அதிகாாிகள் நடவடிக்கை எடுக்காததால், மாணவர்கள் மரத்தடியிலும், கோவிலிலும் அமர்ந்து கல்வி கற்கும் சூழ்நிலை உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே பள்ளிக்கு உடனடியாக புதிய கட்டிடம் கட்டித்தர சம்பந்தப்பட்ட துறை அதிகாாிகள் நடவடிக்கை எடுப்பார்களா?