சிவகங்கை மாவட்டம் பாகனேரி கிராமத்தில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சாலையில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் நடந்த செல்போர், வாகன ஓட்டிகளை கடிக்க துரத்துகின்றன. இதனால் பலர் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் நாய்கள் வாகன ஓட்டிகளின் வாகனங்களின் மீது மோதுவதால் அவ்வப்போது விபத்துகளும் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. எனவே பொதுமக்களுக்கு தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.