முட்புதர்களால் மாணவர்கள் அவதி

Update: 2023-09-04 16:47 GMT

நிலக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் வழியில் அணைப்பட்டி சாலையின் இருபுறமும் முட்புதர்களாக காட்சியளிக்கிறது. மேலும் சாக்கடை கழிவுநீரும் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். கழிவுநீர் தேங்குவதால் அவர்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே முட்புதர்களை அகற்றுவதுடன், கழிவுநீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்