விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா ராம்நகர் 4-வது தெருவில் நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாலையில் செல்பவர்களை நாய்கள் துரத்துவதால் குழந்தைகள் சாலையில் செல்ல அச்சமடைகின்றனர். இதனால் பொதுமக்களும் சாலையில் அச்சத்துடன் தான் நடந்து செல்கின்றனர். எனவே தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?