நெல்லை பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் இருந்து பாளையங்கோட்டூர் வரையிலும் பாளையங்கால்வாயில் தடுப்புச்சுவர் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் இரவில் அந்த வழியாக செல்கிறவர்கள் வாய்க்காலுக்குள் தவறி விழுந்து காயமடைகின்றனர். எனவே சேதமடைந்த வாய்க்கால் தடுப்பு சுவரை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.