விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2022-07-25 13:27 GMT

புதுக்கோட்டை-விராலிமலை சாலையில் அன்னவாசல் பேரூராட்சி அலுவலகம் அருகே சாலையின் குறுக்கே உள்ள பாலத்தின் ஓரங்களில் சாலை அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்து வருகிறது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகனங்கள் இரவு நேரங்களில் சாலையோரத்தில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் சிக்கிக்கொள்கின்றன. மேலும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் சாலையோரம் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்