சமூக விரோதிகள் அட்டகாசம்

Update: 2023-08-30 09:27 GMT
வடபொன்பரப்பியில் கால்நடை மருத்துவமனை உள்ளது. இங்கு இரவு நேரத்தில் சமூக விரோதிகள் சிலர் புகுந்து மது குடித்து வருகின்றனர். பின்னர் அந்த மது பாட்டில்களை அங்கேயே கீழே போட்டு உடைத்து விட்டு செல்கின்றனர். இதனால் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு விவசாயிகள் அழைத்துச் செல்லும் போது மதுபாட்டில்கள் கால்நடைகளின் காலில் குத்துவதால் அதுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதைத் தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்