மதுப்பிரியர்கள் அட்டகாசம்

Update: 2023-08-27 10:29 GMT

சுல்தான்பேட்டை அருகே செஞ்சேரிமலையில் பி.ஏ.பி. கால்வாய் உள்ள பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்ட்டு இருக்கிறது. இந்த நிழற்குடைக்குள் இரவில் மதுப்பிரியர்கள் அமர்ந்து மது அருந்துகின்றனர். பின்னர் காலி மதுபாட்டில்களை உடைத்து வீசி விட்டு செல்கின்றனர். இதனால் காலையில் பஸ் ஏற வரும் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே மதுப்பிரியர்கள் அட்டகாசத்துக்கு தீர்வு காண இரவு நேர ரோந்து பணியை போலீசார் தீவிரப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்