திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா வஸ்த்தர ராஜபுரம் கிராமத்தில் நாய்கள் அதிக அளவில் சுற்றி திரிகின்றன. இவை அந்த வழியாக பள்ளிக்கு செல்லும், மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்களை விரட்டி சென்று கடிக்கிறது. இதனால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் அச்சத்துடன் சாலையில் சென்று வருகின்றனர். வாகனங்களில் செல்பவர்களையும் துரத்தி செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் அவற்றுள் ஒரு சில நாய்கள் நோய்வாய்ப்பட்டு காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் சாலையில் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?