நாய்கள் தொல்லை

Update: 2022-07-25 11:52 GMT

மயிலாடுதுறை பகுதி கூறைநாடு எடத்தெருவில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை அந்த பகுதியில் உள்ள வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, கோழிகளை வேட்டையாடி செல்கின்றன. மேலும், சாலையில் நடந்து செல்லும் பெண்கள், குழந்தைகளை விரட்டி செல்கின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் சாலையில் சென்று வருகின்றனர். மேலும், வாகனங்களை நாய்கள் துரத்தி செல்வதால் வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்