வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படுமா?

Update: 2023-08-20 11:35 GMT

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் இந்த மருத்துவமனை பகுதியில் வாகன நிறுத்துமிடம் முறையாக அமைக்கப்படாமல் உள்ளதால், வெளியூர்களில் இருந்து வரும் நோயாளிகள் தங்களின் வாகனங்களை நோயாளிகளுக்கு இடையூறாக நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மருத்துவமனை வளாகத்தில் வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

மயான வசதி