பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?

Update: 2026-05-03 18:16 GMT

திருச்சி மன்னார்புரம் ரவுண்டானா வழியாக செல்லும் அனைத்து பஸ்களும் மன்னார்புரம் ரவுண்டானா பகுதியில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன. இங்கிருந்து பயணிகள் பல்வேறு ஊர்களுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் மன்னார்புரம் ரவுண்டானா பகுதியில் தஞ்சாவூர், சென்னை செல்லும் பஸ்கள் நிற்கும் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் பயணிகள் வெயிலில் நின்று பஸ் ஏறி செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் புதிய பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்