மதுப்பிரியர்கள் தொல்லை

Update: 2023-08-20 10:09 GMT

சுல்தான்பேட்டை அருகே செஞ்சேரிமலை பி.ஏ.பி. வாய்க்கால் மேடு பகுதியில் மாலை நேரங்களில் மதுப்பிரியர்கள் அமர்ந்து மது குடிக்கின்றனர். பின்னர் காலி மது பாட்டில்களை அங்கேயே உடைத்து வீசிவிட்டு செல்கின்றனர். மேலும் போதை தலைக்கேறியதும் அந்த வழியாக செல்பவர்களை மறித்து தகராறில் ஈடுபடுகின்றனர். இதனால் அந்த வழியாக செல்லவே பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே மதுப்பிரியர்கள் தொல்லையை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்