வடலூர் நகராட்சி 6-வது வார்டில் உள்ள ஜெயப்பிரியா நகரில் சிறுவா் விளையாட்டு பூங்கா உள்ளது. இதில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து, புதர்மண்டி கிடக்கிறது. இதனால் சிறுவர்கள் விளையாட்டு பூங்காவை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே அனைத்து விளையாட்டு உபகரணங்களையும் சீரமைப்பதோடு, தினசரி பூங்காவை பராமரிக்க வேண்டும் என்பதே அப்பகுதி பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.
