தெருநாய்களால் தொல்லை

Update: 2022-07-24 17:13 GMT

திருச்சி மாநகராட்சி கூனிபஜார், சவேரியார் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை இவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை கடிக்க துரத்துவதினால் அவர்கள் பயத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். மேலும் பள்ளி செல்லும் குழந்தைகளை கடிக்க வருவதினால் பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்