சென்னை மணலி புதுநகர் பைபாஸ் பஸ் நிறுத்தம் அருகில் இருக்கும் சமுதாய கூடம் கட்டிமுடிக்கப்பட்டும் திறக்கப்படாமல் இருப்பது குறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் சுட்டிகாட்டப்பட்டது. அதிகாரிகளின் உடனடி நடவடிக்கையால் சமுதாய கூடம் திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த மக்கள் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், இதற்கு உதவியாக இருந்த 'தினந்தந்தி'க்கும் பாராட்டை தெரிவித்துள்ளனர்.