சிதிலமடைந்த சுகாதார நிலையம்

Update: 2023-08-13 11:41 GMT

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், கீழக்குன்னுப்பட்டியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் நலனை கருத்தில் கொண்டு இப்பகுதியில் அரசு துணை சுகாதார நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த சுகாதார நிலையம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த சுகாதார நிலையம் இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்