நெல்லை- அம்பை மெயின் ரோட்டில் முன்னீர்பள்ளம் ரெயில்வே மேம்பாலத்தில் சாலையின் இருபுறமும் மண் குவிந்துள்ளதாக தேவராஜ் என்பவர் அனுப்பிய பதிவு ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அங்கு கிடந்த மண் அகற்றப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.