பள்ளிக்கு அடிப்படை வசதி தேவை

Update: 2023-08-06 15:41 GMT

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே சிவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு முறையான கழிப்பிட வசதி மற்றும் குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதி இல்லாமல் அவதியடைந்து வருகின்றனர். மேலும் இந்த பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால் விஷஜந்துக்கள் பள்ளி வளாகத்தில் சுற்றித்திரிவதால் மாணவர்கள் அச்சப்படுகின்றனர். எனவே அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி பள்ளிக்கு சுற்றுசுவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

-ஜெய், நல்லம்பள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்

மயான வசதி