மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர் பகுதி தென்பாதி, அகர திருக்கோலக்காதெரு, புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், பன்னீர்செல்வம் தெரு, ரெயில்வே ரோடு, ஈசானிய தெரு, மேல மாரியம்மன் கோவில் தெரு, இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் நாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை அந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு,கோழிகளை வேட்டையாடி செல்கின்றன. மேலும், சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள், பெண்கள், குழந்தைகளை விரட்டி செல்கின்றன. மேலும், சாலையில் செல்லும் வாகனங்களை துரத்தி செல்வதால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா?