மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா தர்மாசனம்பட்டி கிராமத்தில் உள்ள தரைபாலத்தின் மேற்பரப்பில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. பாலம் தரைமட்டமாக காணப்படுவதால் இந்த பகுதியில் சிறிய மழை பெய்தால் கூட தண்ணீர் செல்வதற்கு வழியின்றி குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துவிடுகிறது. மேலும் கிராமத்தில் உள்ள கண்மாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கண்மாயில் தண்ணீரை சேமிக்க முடியாமல் விவசாயம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் புதிய பாலம் அமைக்கவும், கண்மாயை தூர்வாரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.