சிதம்பரம்-சீர்காழி செல்லும் சாலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு புதிதாக கட்டப்பட்ட அம்மாபேட்டை பாலம் தற்போது வரை பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் வெகுதூரம் சுற்றிச்செல்லும் நிலை உள்ளதால், கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே பாலத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாகும்.