விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோவில் பகுதி பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக கருதப்படுகிறது. இந்த பகுதியில் பல்வேறு வங்கிகள் செயல்பட்டு வருகிறது. ஆனால் இப்பகுதியில் தபால்நிலைய வசதி இல்லை. ஆதலால் இப்பகுதியினர் அருகில் உள்ள பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே இப்பகுதியில் தபால்நிலையம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.