மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகா மருதங்குடி கிராமத்தில் உள்ள கண்மாய் மறுகால் வாய்க்கால் கரையில் உள்ள பொதுப்பாதையில் சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமித்து வளர்ந்து உள்ளன. இந்த பாதையை பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த கருவேல ஆக்கிரமிப்பால் இவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பாதையில் உள்ள கருவேல மரங்களை அகற்றி மெட்டல் சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.