அடிப்படை வசதிகள் செய்துதர கோரிக்கை

Update: 2022-07-24 12:21 GMT

பெரம்பலூர் அருகே ஆலம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட செஞ்சேரி கிராமத்தில் செட்டிகுளம் பிரதான சாலையில் கவுரிநகர் உள்ளது. இந்த குடியிருப்பில் அரசு ஊழியர்கள், ராணுவத்தினர் மற்றும் அரசு ஓய்வூதியதாரர்கள் வீடுகட்டி 10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். ஊராட்சி மன்றத்திற்கு முறையாக வீட்டுவரி செலுத்தி வருகிறோம். இந்த குடியிருப்பு பகுதியில் சாலை வசதி, மின்கம்பங்கள், தெருவிளக்கு வசதி, கழிவுநீர் கால்வாய் போன்ற அடிப்படை வசதிகளை போர்க்கால அடிப்படையில் உடனே செய்துதர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்