பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறைமங்கலம் 4 ரோடு சந்திப்பு பகுதியில் தினமும் பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள், பயணிகள் வெளியூர்களில் இருந்து பெரம்பலூர் வந்தடைகின்றனர். பலர் வெளியூர் புறப்பட்டு செல்கின்றனர். ஆனால் இப்பகுதியில் சுகாதார வளாகங்கள் இதுவரை அமைக்கப்படவில்லை. பொதுமக்கள் மின்வாரிய அலுவலகம் அருகே சாலை ஓரங்களையும், திறந்த வெளியையும் சுகாதார கழிப்பிடங்களாக பயன்படுத்தி வருகின்றனர். எந்த நேரமும் நான்கு ரோடு வந்து இறங்கும் பஸ் பயணிகளின் நலனுக்காக சுகாதார வளாகம் கட்ட நகராட்சி நிர்வாகமும், மாவட்ட கலெக்டரும் உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம்.