கடலூர் செயின்ட் ஜோசப் பள்ளிக்கு செல்லும் சாலையின் ஓரத்தில் பொிய அளவில் பள்ளம் தோண்டப்பட்டு, மூடப்படாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் மாணவர்கள் அதில் தவறி விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், அவர்கள் அச்சப்படுகின்றனர். எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன் சாலையோர பள்ளத்தை மூட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.