இருக்கைகள் இல்லாத நிழற்கூடம்

Update: 2023-07-09 12:09 GMT
சாத்தான்குளம் அருகே நொச்சிகுளம் பஸ் நிறுத்த பயணிகள் நிழற்குடையில் இரும்பாலான இருக்கைகள் சேதமடைந்த நிலையில் இருந்தன. நாளடைவில் அவைகள் மாயமாகி விட்டன. இதனால் பயணிகள் பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்து நிற்கும் அவல நிலை உள்ளது. எனவே அங்கு கான்கிரீட்டாலான இருக்கைகள் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்