காட்டுப்பன்றிகள் தொல்லை

Update: 2023-07-09 10:13 GMT

கோவை ஆலாந்துறை அருகே காருண்யா நகர், ஈடன் கார்டன், எம்.ஆர்.ஆர். கார்டன் ஆகிய பகுதிகளில் காட்டுப்பன்றிகள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அவை குப்பைகளையும், சாக்கடைகளையும் வீதியில் சிதறடித்துவிட்டு செல்வதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சில நேரங்களில் வீதியில் நடந்து செல்பவர்களை துரத்துகின்றன. இது தவிர வீடுகளுக்குள்ளும் புகுந்து விடுகின்றன. எனவே அந்த பகுதிகளில் காட்டுப்பன்றிகள் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தபட்ட துறையினர் முன்வர வேண்டும். 

மேலும் செய்திகள்