அச்சுறுத்தும் அரச மரம்

Update: 2023-07-02 11:32 GMT

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், தளுகை ஊராட்சி 12-வது வார்டு அரிஜன தெரு எம்.ஜி.ஆர். காலனியில் பழமையான ஓட்டுவில்லை வீடுகளில் மக்கள் வசித்துவருகிறார்கள். இவர்களின் வீடிற்கு அருகே பாழடைந்த கிணறு ஒன்று உள்ளது. அந்த கிணற்றில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டிவருகிறார்கள். அந்த பாழடைந்த கிணற்றின் பக்கவாட்டில் முளைத்த அரசமரம் ஒன்று தற்போது வளர்ந்து பெரிய மரமாக உள்ளது. காற்றடிக்கும்போதெல்லாம் அரசமரம் ஓட்டு வீட்டின் மீது விழுந்துவிடும் என்ற அச்சத்தில் வாழ்ந்து வருகிறார்கள். எனவே பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள அரச மரத்தை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்