மழைநீர் தேங்குவதால் போக்குவரத்து பாதிப்பு

Update: 2022-07-23 15:39 GMT

திருச்சி ஒத்தக்கடை சிக்னலில் இருந்து கான்வென்ட் ரோடு வழியாக செல்லும் பழைய போஸ்ட் ஆபீஸ் ரோட்டில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகிறார்கள். திருச்சியில் கனமழை பெய்யும் போது மேலப்புதூர் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி விடும். அது போன்ற சமயங்களில் அனைத்து வாகனங்களும் மேலப்புதூர் மார்சிங்பேட்டை, பீமநகர் பகுதியை கடந்து தான் பாலக்கரை பாலம் வழியாக சென்று வருகின்றன. பீமநகர் மார்சிங்பேட்டை சாலையில் இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். அப்போது மாற்றுப்பாதையாக பழைய போஸ்ட் ஆபிஸ் ரோட்டை வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகிறார்கள். அங்கேயும் மழை தண்ணீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் எந்த வழியாக செல்வது என தெரியாமல் அவதி அடைகிறார்கள். ஆகவே பழைய போஸ்ட் ஆபீஸ் ரோட்டில் சாக்கடைகளை தூர்வாரி மழை தண்ணீர் தேங்காத வகையில் மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்