தகவல் பலகை வைக்க கோரிக்கை

Update: 2022-07-23 15:38 GMT

திருச்சி மாவட்டம் திருவானைக்கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் நீர்(அப்பு) ஸ்தலமாகும். இக்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வெளி மாவட்டங்களில் இருந்தும் ெவளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் வந்து செல்கின்றனர். ஆனால் இக்கோவிலின் ஸ்தல வரலாறு பற்றி முழுமையாக அவர்களால் அறிந்து கொள்ள இயலாத நிலை உள்ளது. எனவே அனைவரது பார்வைக்கும் தெரியும்படி சிவன் சன்னதி கொடிமரம் அருகே தமிழ், ஆங்கில மொழியில் தகவல் பலகை வைக்க கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

மேலும் செய்திகள்