ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மேல்சாக்குளம் முக்குரோட்டில் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்குள்ள பயணிகள் நிழற்குடை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் அச்சத்தில் உள்ளனர். சேதமடைந்த நிழற்குடையால் பயணிகள் மழையிலும், வெயிலிலும் காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே அதிகாரிகள் சேதமடைந்த நிழற்குடையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.