பஸ்கள் நின்று செல்ல வேண்டும்

Update: 2023-06-28 09:38 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், ஆண்டகலூர் கேட் அருகில் உள்ள பாலப்பாளையம் பஸ் நிறுத்தத்தில் ஈரோட்டில் இருந்து ராசிபுரம் செல்லும் அரசு பஸ்கள் மற்றும் ஒருசில தனியார் பஸ்கள் நின்று செல்வதில்லை. குருசாமிபாளையம் பஸ் நிறுத்தத்திற்கு அடுத்து ஆண்டகலூர்கேட் பஸ் நிறுத்தத்தில் மட்டும் நிற்கிறது. வழியில் எங்கும் நிறுத்துவதில்லை. இதனால் ஈரோடு செல்வதற்கு ஆண்டகலூர்கேட் அல்லது குருசாமிபாளையம் சென்று பஸ்சில் ஏறும் நிலை உள்ளது. எனவே அனைத்து பஸ்களும் பாலப்பாளையத்தில் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்